அஷ்பால் அல்குர்ஆன் அகடமியின் 07 வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று மம/அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் அஷ்ஷேய் அல்ஹாபிழ் எம்.எல்.எம் இர்ஷாத் (BA) தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக சுகாதார வைத்திய அதிகாரி Dr. சாபிரா வஸீம்,ஏ.ப.மு.நி.சம்மேளனத் தலைவர் எம்.எம் முகைதீன்,ஓய்வு பெற்ற அதிபர் அல்ஹாபிழா பஹிய்யா அப்துல் காதர்,அல்ஹாபிழா எம்.எஸ்.எப்.ஹானீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர் நிஹார மெளஜூத்
உரையாற்றும் போது 11 வருடங்களாக ஏறாவூரின் பல பாகங்களிலும் இயங்கி வரும் அஷ்பால் அல்குர்ஆன் அகடமியானது பல சவால்களுக்கு மத்தியிலும் முறையான பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் குழாமுடன் ஒழுக்க விழுமியங்களை பேணி ஒழுகும், நாட்டிற்கு நற்பிரஜைகளை உருவாக்கி கொடுப்பதில் முன்னிலை வகிக்கின்றது.இவ்வாறான அகடமிகளை ஊக்குவிப்பதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் முன் வர வேண்டும் என்று கூறினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு நிகழ்வும் இங்கே இடம்பெற்றது.
0 comments :
Post a Comment