Nadi.lk - நாடி - நாடி பெருமையுடன் வழங்கிய இசைச்சங்கமம் பாடல் வெளியீட்டு விழா கொழும்பு Colombo City Centre
இல் அமைந்துள்ள Scope Cinemas திரையரங்கில் கடந்த வெள்ளி மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
தெரண தொலைக்காட்சி பெரும் பொருட்செலவில் உருவாக்கிய பாடல்களுக்கு நிமேஸ் குலசிங்க,சத்துரங்க டி சில்வா ஆகியோர் இசை வழங்க பொத்துவில் அஸ்மின் கவி வரிகளை எழுதியிருந்தாா்..
பாடல்களை கோகுலன் சாந்தன்( யாழ்ப்பாணம்),சுதர்சினி கோணேஸ்வரன்(திருகோணமலை)
குகனேஸ்வரன்(பதுளை) சாதீர் அஹமட் (கொழும்பு) ரவி ரொயிஸ்ட்டர் (மாத்தறை) ஆகியோர் பாடியுள்ளனர்.
"கலைகள் ஊடாக இன ஐக்கியத்தை ஏற்படுத்தி இலங்கை மண்ணை செழுமையாக்குவோம்" என்ற தொனிப்பொருளில் தெரண தொலைக்காட்சியின் பிரதித்தலைவரும் பிரதம நிறைவேற்று பணிப்பாளருமான லக்சிரிவிக்ரமகே அவர்களின் எண்ணக்கருவில் உருவான "இசை சங்கமம்" பாடல்களில் இலங்கையின் அனைத்து சமூகத்தை சேர்ந்த கலைஞர்கள் நான்கு திசைகளிலும் இருந்து பங்களிப்பு செய்துள்ளனர்.
பாடல் வெளியீட்டு நிகழ்வுக்கு இலங்கையின் பிரபல கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், கவிஞர்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
பாடல்களை தெரண தொலைக்காட்சியின் தலைவர் திரு.டிலித் ஜெயவீர Dilith Jayaweera
, பிரதித் தவிசாளர் லக்சிரிவிக்ரமகே, நிகழ்ச்சிப்பிரிவு பணிப்பாளர் சர்மிளா தர்மராசா ஆகியோர் இணைந்து eTunes.lk
தளத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுவைத்தனர்.
ஏலவே சகோதர மொழியில் பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி பெற்ற பாடல்களை தமிழில் எழுதுவதற்கு கவிஞா் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பினை வழங்கிய தெரண தொலைக்காட்சியின் பிரதித்தலைவர் திரு.லக்சிரி விக்ரமகே Laksiri Wickramage
அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை பொத்துவில் அஸ்மின் தெரிவித்துக் கொள்கின்றாா்.
-பாடலாசிரியர் அஸ்மின்-
பாடல்களை ரசிக்க..
http://www.etunes.lk/newrelease/
0 comments :
Post a Comment