இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, இறக்காமம் - 03, 05, 08 மற்றும் வரிப்பத்தான்சேனை - 03 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் காணி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே காணிக்கச்சேரி நடாத்தப்பட்டிருந்தது. எனினும், குறித்த காணிக் கச்சேரிகளுக்கு தகுந்த காரணங்களினால் வருகை தராதவர்களுக்கான காணிக் கச்சேரி இன்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நசீல் தலைமையில் இடம்பெற்றது.
இக்காணிக் கச்சேரிக்கு பிரதேச செயலகக் காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் பிரிவிற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதோடு, குறித்த பொது மக்களும் பங்குபற்றியதோடு தங்கள் காணிப் பிரச்சினை தொடர்பாக நேரடியாக உரிய அதிகாரிகளின் கவத்திற்கு கொண்டுவந்து தீர்வைப் பெற்றுக்கொண்டனர்.
0 comments :
Post a Comment