வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்க பெற்றோர்களுடன் சந்திப்பு



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் க.பொ.த. சாதாரண தர மாணவிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கிலே பெற்றோருடன் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
மாணவிகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், பாடசாலை பிரதி அதிபர் எஸ். பாறூக் கான், ஆசிரியர்களான எம்.எல்.எம்.முஸம்மில், கே.ஆர்.எம்.இர்ஷாத், ஏ.ஆர்.முகைதீன் பாவா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :