நாவிதன்வெளியில் மூவினமாணவர்களும் பங்கேற்ற தைப்பொங்கல்விழா!



காரைதீவு நிருபர்-
நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) வருடாந்த தைப்பொங்கல் தினவிழா இம்முறை மூவினமாணவர்கள், மூன்றுமத ஆசிரியர்களின் பங்கேற்றலுடன் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலை அதிபர் சீ.பாலசிங்கனின் தலைமையில் மேற்படிவிழா பாடசாலை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் சிறப்பாகநடைபெற்றது.

பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரனின் வழிகாட்டலில், உதவிஅதிபர் ந.கோடீஸ்வரன் நெறிப்படுத்தலில் பொங்கல்விழா சிறப்பாக நடைபெற்றது.

பிரதமஅதிதியாக சம்மாந்துறை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார். அவர் பொங்கலின் வரலாறு மகிமை பற்றி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, பொங்கல் இடம்பெற்று சமயஆராதனை இடம்பெற்றது.அத்துடன் கலாசரபாரம்பரியத்திற்கமைவாக ஏனைய பட்சணங்களும் தயார்படுத்தப்பட்டிருந்தன.

விழாவில் பங்கேற்ற இஸ்லாமிய கிறிஸ்தவ ஆசிரியர்கள் மற்றும் மூவினமாணவர்களும் பாரம்பரிய பொங்கலை உணவை விரும்பி பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கஅம்சமாகவிருந்தது.

உதவிஅதிபர்களான என்.வன்னியசிங்கம் ,திருமதி சு.ருபன், வெ.மகேஸ்வரன் ,கி.ஜெகதீசன் திருமதி மே.அருள்நாயகம், உள்ளிட்ட ஆசிரியர்கள் ,கலந்துசிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :