காரைதீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற சுனாமி நினைவுதினநிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ழிப்பேரலை தென்கிழக்காசியாவைத் தாக்கி 17வருடங்கள் நிறைவுபெற்றமையொட்டி அதில் உயிர்நீத்த உறவுகளுக்கான ஆத்மாஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு காரைதீவில் உணர்வுபூர்வமாக (26) இடம்பெற்றது.

காரைதீவு கடற்கரையில் அமைந்துள்ள சுனாமி நினைவுத்தூபியடியில் நடைபெற்ற இச் சுனாமி நினைவுதினநிகழ்வை இந்துசமயவிருத்தி சங்கமும், மீனவர்சமுகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

ஆன்மீக அதிதியாகக்கலந்துகொண்ட சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் ,சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் ஆகியோர் நந்திக்கொடி ஏற்றி சுனாமி நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து பஞ்சாராத்தி காட்டி விசேட பூஜை நிகழ்த்தினர்.

தொடர்ந்து சுனாமி தீபமேற்றல் நிகழ்வும் கடலுக்கு புஸ்பாஞ்சலி நிகழ்வும் நடாத்தப்பட்டது. 5நிமிடநேரம் இறந்தவர்களுக்கான மௌனாஞ்சலியும் சாந்தி மந்திரமும் ஓதி நிகழ்த்தப்பட்டது.

இந்துசமயவிருத்திச்சங்க முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமைதாங்கிய நிகழ்வில் , காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில், பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜன் ,அறங்காவலர் ஒன்றிய செயலாளர் சி.நந்தேஸ்வரன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர்.

ஆலயஅறங்காவலர்கள், காரைதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகரி ஆர்.ஜெகத் ,அறநெறிமாணவர்கள் முக்கிய பிரமுகர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்துசமயவிருத்திச்சங்க செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :