சாய்ந்தமருதின் சிரேஷ்ட தொழிலதிபர் முபாறக், கலாநிதி பட்டம் பெற்றார்.



ளம் முயற்சியாண்மை தொழிலதிபர் மற்றும் சமூக சேவை என்பற்றிக்கு ஐக்கிய அமெரிக்காவின் உலக தமிழ் பல்கலைக்கழகம் கெளரவ கலாநிதி பட்டத்தினை சாய்ந்தமருது வர்த்தகர் சங்க தலைவரும் முபாறக் டெக்ஸ்டைல்ஸ் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக்கிக்கு வழங்கி கெளரவித்துள்ளது.

ஐக்கிய அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்றது.
ஆடை வியாபாரத்துறையில் சுமார் 30 வருட காலமாக கிழக்கிலங்கை மக்களுக்கு வழங்கி வரும் வர்த்தக சேவையினையும் பொதுமக்களின் தேவைகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கும் பங்களிப்புக்கள் என்பவற்றிக்காக இக்கலாநிதிப் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.

ஏழ்மையை வெற்றி கொண்டு முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவத்தின் மூலமாக தனக்கான தனி அடையாளத்தினை இத்தரணியில் பதித்துக்கொண்ட எம்.எஸ்.எம்.முபாறக், மருதூருக்கும் தனது நிறுவனத்தினூடாக பெருமை சேர்த்துள்ளார்.
 
சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர் சங்கத்தின் தலைமைப் பதவியினை பொறுப்பேற்ற முபாறக் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன் பல மனிதாபிமான உதவிகளையும் தனது நிறுவனத்தினூடாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :