நிந்தவூரில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமானது !

மாளிகைக்காடு நிருபர்-

னாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விவசாயத் துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக் குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளினால் சேதன பசளை தயாரிக்கும் முயற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த செயற்பாடுகளை நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப் தலைமையிலான பிரதி திட்டமிடல் பணிப்பாளர் சுல்பிகார், சமூர்த்தி முகாமையாளர், கிராம உத்தியோகத்தர் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உறுப்பினர் அடங்கிய குழு மேற்கொண்டு சேதனை உர உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான மேலதிக ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :