டிஜிட்டல் தாராசு வேண்டாம், சர்வாதிகார போக்கை நிறுத்து. பொகவந்தலவை கீழ் பிரிவில் தொழிலாளர்கள் ஆர்பாட்டம்...
தோட்ட முகாமையாளரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் என கோரியும் பொகவந்தலாவை கீழ் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை கீழ் பிரிவு சின்டாகட்டி கோயில் முன்றலிலே 23/09 மதியம் இந்த ஆர்பாட்டம் இடம்பெற்றது.
இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தாவது...
டிஜிட்டல் தராசில் பச்சை கொழுந்து நிறுக்கும் போது கொழுந்தின் எடையில் மோசடி இடம்பெறுகின்றது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று நேரம் கொழுந்து நிலுவை இடம்பெறுகையில் சுமார் 10 கிலோ கிராம் வரை மோசடிஇடம்பெறுகிறது.
அத்தோடு உண்மையான கொழுந்தின் எடையை எங்களால் தெரிந்து கொள்ள முடிவதில்லை ஆகவே நேற்றைய தினம் முகாமையாளரிடம் டிஜிட்டல் தராசு வேண்டாம் கடந்த காலத்தில் போல சாரதாரண தராசினை இனி கொழுந்து நிறுக்க பயன்படுத்துமாறு கோரினோம் ஆனால்,. முகாமையாளர் அதை செய்யாது இன்றும்
டிஜிட்டல் தராசிலே கொழுந்தை நிறுக்க முற்படுகின்றார்.
ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் அறிவிக்கப்பட்ட கால தொட்டே தோட்ட நிர்வாகம் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விட்டது
கொழுந்து இருக்கும் காலத்தில் எங்களால் 18 கிலோ கிராம் பச்சை கொழுந்து பறிக்க முடியும் ஆனால், கொழுந்து இல்லாத இக் காலத்தில் எவ்வாறு 18 கிலோ எடுக்க முடியும்.
12,13 கிலோ எடுத்தால் அரை நாள் பெயரே போடுகின்றார். நாங்கள் எப்படி எங்களது வாழ்கையை கொண்டு செல்வது கொழுந்து பறிக்க மட்டும் தோட்ட முகாமையாளர் முற்படுகின்றார் தோட்டங்கள் துப்பரவு செய்வதில்லை தோயிலைமலைகள் காடாகியுள்ளது என தெரிவித்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் காட்டபிட்டிவை தொடர்பு கொண்டபோது டிஜிட்டல் தாரசு இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை பெற்றே பெருந்தோட்டங்களில் டிஜிட்டல் தராசு பயன்
படுத்துகின்றோம் டிஜிட்டல் தராசில் எந்த மோசடியும் இல்லை வேலை செய்ய சோம்பேரி தனம் உள்ளவர்களே இவ்வாறு பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தொழிலாளர்களை தூண்டி விடுகின்றனர் என தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் நாட் சம்பளம் அறிவிக்கப்பட்ட கால தொட்டே தோட்ட நிர்வாகம் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கி விட்டது
கொழுந்து இருக்கும் காலத்தில் எங்களால் 18 கிலோ கிராம் பச்சை கொழுந்து பறிக்க முடியும் ஆனால், கொழுந்து இல்லாத இக் காலத்தில் எவ்வாறு 18 கிலோ எடுக்க முடியும்.
12,13 கிலோ எடுத்தால் அரை நாள் பெயரே போடுகின்றார். நாங்கள் எப்படி எங்களது வாழ்கையை கொண்டு செல்வது கொழுந்து பறிக்க மட்டும் தோட்ட முகாமையாளர் முற்படுகின்றார் தோட்டங்கள் துப்பரவு செய்வதில்லை தோயிலைமலைகள் காடாகியுள்ளது என தெரிவித்தனர்.
இது தொடர்பில் தோட்ட முகாமையாளர் காட்டபிட்டிவை தொடர்பு கொண்டபோது டிஜிட்டல் தாரசு இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை பெற்றே பெருந்தோட்டங்களில் டிஜிட்டல் தராசு பயன்
படுத்துகின்றோம் டிஜிட்டல் தராசில் எந்த மோசடியும் இல்லை வேலை செய்ய சோம்பேரி தனம் உள்ளவர்களே இவ்வாறு பொய் குற்றச்சாட்டை முன்வைத்து தொழிலாளர்களை தூண்டி விடுகின்றனர் என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment