சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு வீடு, மலசல கூடங்கள் கையளிப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
முர்த்தி சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு சௌபாக்கியா விசேட வீடமைப்பு திட்டத்தின் மூலம் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் வீடமைப்பு திட்டங்கள் மற்றும் மலசல கூடங்கள் அமைக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டு பயனாளிளுக்கு கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் பிறைந்துறைச்சேனை மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் நான்கு வீடுகள் மற்றும் இரண்டு மலசல கூடங்கள் என்பன கையளிக்கப்பட்டது.

சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப் தலமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவி பிரதேச செயலாளர் ஜனாபா எம்.ஏ.சி.ரமீசா, சமுர்த்தி சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், சமுர்த்தி பிரிவு உத்தியோகத்தர்களான ஏ.சி.சாதிக்கீன், சி.எம்.எஸ்.இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :