உலகதரிசன நிறுவனம் 80 நோயாளர்கள் கட்டில்கள் அன்பளிப்பு!



வி.ரி.சகாதேவராஜா-
லகதரிசன நிறுவனம்(World Vision) கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட்டால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்காக, 80 நோயாளர்கள் கட்டில்களை கல்முனைப்பிராந்தியத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளது.

கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணனிடம் ,80கட்டில்களையும் உலகதரிசன நிறுவன பிரதிநிதி கிளாரண்ஸ் சுதர்சன் வழங்கிவைத்தார்.

அவற்றை திருக்கோவில் ஆதாரவைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று ,பாலமுனை ,மருதமுனை ,சாய்ந்தமருது, அன்னமலை ஆகிய பிரதேச வைத்தியசாலைகளுக்கும் வழங்கிவைக்கப்பட்டது. பொறுப்பு வைத்திய அதிகாரிகள் அவற்றை பெற்றுக்கொண்டனர்.

இக் காலம்கருதிய சேவைக்காக, பணிப்பாளர் சுகுணன் உலகதரிசன நிறுவனத்திற்கு நன்றிகூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :