அட்டன் டிக்கோயா நகரசபைக்குற்பட்ட நகர வர்த்தக நிலையங்களை மூடி நகரை சுயதனிமைப்படுத்தி கொரோனா தொற்றை ஒழிக்க வார்த்தகர்களும் பொதுமக்களும் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அட்டன் டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்துள்ளார்
அட்டன் டிக்கோயா நகரசபை எல்லைப்பகுதியில் 60 வீதமான கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் 17/08 விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பலாங்கொடை, இரத்தினபுரி ,பண்டாரவளை ,கேகாலை, உட்பட பல நகரங்கள் மூடப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகரங்களில் ஒன்றான அட்டன் நகரமானது நாளாந்தம் அதிகளவானோர் வந்து செல்லும் நகரமாக காணப்படுகின்றதுடன் நாளந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
தற்போது அட்டன் டிக்கோயா நகரசபை ,ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் தொற்றுக்குள்ளாகி 60 வீதம் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று மரணங்களும் அதிகரித்துள்ளது.
ஆகவே அட்டன் டிக்கோயா நகரை சுயதனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவே நகர வர்த்கர்கள் நகரவாசிகளும் அட்டன் டிக்கோயா நகர சுயதனிமை படுத்த தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும் நகரை அண்டிய பொது மக்களும் இளைஞர்களும் அநாவசியமாக நகரிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவை நிமித்தம் வருகைத்தருவோம் முக கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பேணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பலாங்கொடை, இரத்தினபுரி ,பண்டாரவளை ,கேகாலை, உட்பட பல நகரங்கள் மூடப்பட்டு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பிரதான நகரங்களில் ஒன்றான அட்டன் நகரமானது நாளாந்தம் அதிகளவானோர் வந்து செல்லும் நகரமாக காணப்படுகின்றதுடன் நாளந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது
தற்போது அட்டன் டிக்கோயா நகரசபை ,ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் தொற்றுக்குள்ளாகி 60 வீதம் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்று மரணங்களும் அதிகரித்துள்ளது.
ஆகவே அட்டன் டிக்கோயா நகரை சுயதனிமைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது எனவே நகர வர்த்கர்கள் நகரவாசிகளும் அட்டன் டிக்கோயா நகர சுயதனிமை படுத்த தமது வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
மேலும் நகரை அண்டிய பொது மக்களும் இளைஞர்களும் அநாவசியமாக நகரிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் தேவை நிமித்தம் வருகைத்தருவோம் முக கவசம் அணிந்து சுகாதார விதிமுறைகளை பேணுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

0 comments :
Post a Comment