X-Press pearl கப்பல் வந்த புதுத்தகவல்!



J.f.காமிலா பேகம்-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான mv express pearl கப்பலின் நிலை குறித்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கை பெறப்படுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், கப்பலின் தன்மை குறித்து உரிய முறையில் ஆராயப்பட்டு வருவதாகவும் அதிகார சபையின் தலைவர் தர்ஷினி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய நிலையில், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிபிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்படும் நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரபை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உதவிகளை பெறும் வகையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி அதிகாரபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கப்பல் தொடர்பில் ஆராய்வதற்காக 9 பேர் கொண்ட சுழியோடிகள் குழுவினர் குறித்த பகுதிக்கு பயணித்துள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :