தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப இருந்த சந்திமால் மாயம்?



J.f.காமிலா பேகம்-
தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய பிரபல அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க தனிமைப்படுத்தல் முகாமில் இதுவரை சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது தலவத்துகொடையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

மேற்படி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரபல நடிகை பியுமி ஹன்சமாலி உட்பட 15 பேர் நேற்று கைது செய்யப்பட்டதோடு அவர்கள் பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கும் அழைத்துச்செல்லப்பட்டனர்.

எனினும் இந்த கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க குறித்த 15 பேர் குழுவில் இருக்கவில்லை.

அவரை கைது செய்ய பொலிஸார் கொழும்பு – கோட்டையிலுள்ள வீட்டிற்குச் சென்றபோது அங்கேயும் அவர் இருந்திருக்கவில்லை.

இந்நிலையில் அவர் தலவத்துகொடையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :