கல்முனை மாநகர சபை தீயணைப்பு சேவைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளராக மாநகர சபையின் சிரேஷ்ட தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.அமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இச்சேவையை வினைத்திறன் மிக்கதாக மாற்றியமைக்கும் பொருட்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ் இவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, கல்முனை மாநகர எல்லைக்குள் ஏற்படுகின்ற தீ அனர்த்தங்களின்போது 0672059999 எனும் Hotline இலக்கத்திற்கு பொதுமக்கள் அவசர அழைப்பை ஏற்படுத்தி, தகவல்களை தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment