வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முடக்கப்பட்ட வாழைச்சேனை மருதநகர் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை நாற்பத்தி மூன்று (43) பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் மருதநகர் கிராமத்தில் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் மற்றும் மேலேழுவாரியாக நேற்று சனிக்கிழமை நாற்பத்தி மூன்று (43) பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், இருபது (20) நபர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இடம்பெற்றதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
குறித்த அன்டிஜன் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றது.
0 comments :
Post a Comment