கல்முனையில் நடமாடும் வியாபாரம் மூலம் மாட்டிறைச்சி விற்பனைக்கு ஏற்பாடு



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபை எல்லையினுள் மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக மக்களின் காலடிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லையினுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் பொருட்டு, அந்நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (31) மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சுகாதாரத்துறை, பிரதேச செயலக, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளின் பங்கேற்புடன் மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இக்கூட்டத்தையடுத்து, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மாட்டிறைச்சி வியாபாரிகள் அனைவரும் மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடபட்டது.

இன்று திங்கட்கிழமை (31) பிற்பகல் மாநகர முதலவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின்போது மாட்டிறைச்சியை நடமாடும் வியாபாரம் ஊடாக விற்பனை செய்வதற்கான ஒழுங்கு விதிகள் மற்றும் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை அனைத்து மாட்டிறைச்சி வியாபாரிகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என பணிக்கப்பட்டதுடன் மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நடமாடும் வியாபாரத்திற்காக மாட்டிறைச்சி வியாபாரிகளுக்கு விசேட அனுமதி (Pass) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :