2021.03.08 ஏ.எம்.எம்.அனஸின் “வெட்டவெளியில் கொட்டிக்கிடக்குது” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு மருதானை டவர் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(07) மாலை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
கொழும்பு ஹிக்மா கல்லூரி அதிபர் எம்.எம்.மஹ்ஸ_ர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கொழும்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.மும்தாஸ் பேகம் கலந்து கொண்டார்.
தலைமையுரையை அல் ஹிக்மா கல்லூரி அதிபர் எம்.எம்.மஹ்சூம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.குஸைன் உரையாற்றியதுடன் நஸ்முல் ஹஸைன் கவி உரை நிகழ்த்தினார். அதிதியாக கொழும்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.மும்தாஸ் பேகம் உரைநிகழ்த்தியதுடன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை கலாநிதி அப்துல் கையூம் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களும் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அல்ஹிக்மா கல்லூரி அதிபர்இ ஆசிரியர்கள் பிரதம அதிதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துரைகளை தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வி.என்.எஸ்.உதயசந்திரன்இ ரூம் டூ ரீட் நிகழ்ச்சி திட்ட சிரேஷ்ட அதிகாரி கிருஷ்ணகுமார் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நூலாசிரியர் செல்வன் ஏ.எம்.எம்.அனஸ் நிகழ்த்தியதுடன் நன்றியுரையை ஜனாபா டி.என்.இஸ்ரா நிகழ்த்தினார்.
இதில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்.
கொழும்பு ஹிக்மா கல்லூரி அதிபர் எம்.எம்.மஹ்ஸ_ர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு அதிதியாக கொழும்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.மும்தாஸ் பேகம் கலந்து கொண்டார்.
தலைமையுரையை அல் ஹிக்மா கல்லூரி அதிபர் எம்.எம்.மஹ்சூம் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம்.எம்.எம்.குஸைன் உரையாற்றியதுடன் நஸ்முல் ஹஸைன் கவி உரை நிகழ்த்தினார். அதிதியாக கொழும்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.மும்தாஸ் பேகம் உரைநிகழ்த்தியதுடன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை கலாநிதி அப்துல் கையூம் பிரதம அதிதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கும் நூலின் பிரதிகள் வழங்கப்பட்டதுடன் கலந்து கொண்டவர்களும் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
கொழும்பு அல்ஹிக்மா கல்லூரி அதிபர்இ ஆசிரியர்கள் பிரதம அதிதியினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துரைகளை தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வி.என்.எஸ்.உதயசந்திரன்இ ரூம் டூ ரீட் நிகழ்ச்சி திட்ட சிரேஷ்ட அதிகாரி கிருஷ்ணகுமார் ஆகியோர்கள் நிகழ்த்தினார்கள். ஏற்புரையை நூலாசிரியர் செல்வன் ஏ.எம்.எம்.அனஸ் நிகழ்த்தியதுடன் நன்றியுரையை ஜனாபா டி.என்.இஸ்ரா நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment