நடைப்பயிற்சியின் ஊடாக ஆரோக்கியம் பேணுவோம்" நிகழ்வு அக்கரைப்பற்றில் ஆரம்பம்.



நூருள் ஹுதா உமர்-
The Walkers Union ஏற்பாட்டில் "நடைப்பயிற்சியின் ஊடாக ஆரோக்கியம் பேணுவோம்" எனும் தொனிப்பொருளிலான வருடாந்த நிகழ்வுகளை அக்கரைப்பற்று மாநகர நீர்ப் பூங்காவில் இன்று காலை அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தேசியக் கொடியேற்றி ஆரம்பித்து வைத்தார்.
இன்றைய நிகழ்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 500 மீட்டர் சீரான ஓட்டப்போட்டியுடன், பெண்கள் மற்றும் சிரேஸ்ட பிரஜைகளுக்கான நடைப்போட்டிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அக்கரைப்பற்று மாநகர நீர்ப்பூங்காவை தளமாக கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட The Walkers Union எனும் உடற்பயிற்சியினை ஊக்குவிக்கும் இவ் உன்னதக் குழுமத்தின் ஆரோக்கிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மாநகர முதல்வர் பாராட்டிக் கௌரவித்தமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :