நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை இன்று வியாழக்கிழமை நடைபெற்ற போது தலைமையுரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவி;த்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
சுதந்திரத்தினை நான் அனுபவிக்காமல் பிறரும் அனுபவித்தால் தான் அது உண்மையான சுதந்திரம். எல்லோரும் எனக்கான சுதந்திரம், ஆசைகள், உரிமைகள் கிடைக்கப்பெற வேண்டும் என்று தனிய சிந்திக்கின்றோமே தவிர எனக்கு கிடைத்த சுதந்திரம் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற மனோப்பாங்கு எல்லோருக்கும் குறைவாகவே உள்ளது.
சுதந்திரம் ஆரம்பிக்கப்பட வேண்டிய இடம் வீடு. ஆனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் சுதந்திரம் கிடைப்பது இல்லை. கணவன், மனைவி இருவரும் சுதந்திரத்தினை விட்டுக் கொடுப்பதில்லை. அதேபோன்று கல்வி கற்கின்ற காலத்தில் பிள்ளைகளுக்கு எந்;த சுதந்திரமும் கிடைப்பதில்லை. குழந்தை பிறந்து தாய்ப் பாலினை மறந்த பிற்பாடு உணவு கொடுக்க தொடங்கிய பொழுது சுதந்திரம் அடைக்கப்படுகின்றது.
தந்தை, தாய் இருவரும் பிள்ளை விரும்பும் உணவை விரும்பும் நேரத்தில் வழங்குகின்றோமா என்று தெரியவில்லை. அட்டவணை மூலம் பிள்ளைகளுக்கு உணவுகளை வழங்கி வருகின்றோம். இது தந்தை, தாய் தீர்மானிக்கின்றனர். அதிலே பிள்ளையின் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. கல்வி கற்கும் வேளையிலும் கூட அவர்கள் விரும்புவதை கற்க விடுவதில்லை. அதிலும் புலமைப் பரிசில் தொடங்கி விட்டால் காதுக்குள் வேதம் ஓதும் தாய்மார் அதிகம் உள்ளனர்.
பிள்ளைகள் உயர் கல்வியை கூட சுதந்திரமாக விரும்பியதை கற்க விடுவதில்லை. சமூகத்தினர் ஒன்றிணைந்து சுதந்திரத்தினை சுருக்கிக் கொண்டு வருகின்றோம். இதனை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், கணக்களார் எ.சஜ்ஜாத், ஓட்டமாவடி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீ, நிரவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.ஹமீட், மேலதிக மாவட்ட பதிவாளர எம்.ஐ. மாஜிதீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment