எப்.முபாரக் -
திருகோணமலையில் பொது மக்கள் கூடுவதற்கு நீதிமன்றில் தடைவிதித்துள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை-சிவன் கோயில் முன் பகுதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன் சட்டவிரோதமாக பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையினை திருகோணமலை நீதிமன்றம் நேற்று(26) வழங்கியுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை கடற்கரையினை அண்மித்துள்ள காந்தி சிலையினை அண்டிய பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்
திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பரிசோதகர் துமிந்த ராஜபக்ச அவர்கள் மூலம் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு கோரப்பட்டிருந்தது.
நேற்று 26ஆம் திகதி தொடக்கம் 14 நாட்கள் வரை திருகோணமலை சிவன் கோயில் முன் பகுதி மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன் சட்டவிரோதமாக பொதுமக்கள் கூடுவதற்கும் அவ்வாறு பொதுமக்கள் கூறுவதினால் சுகாதாரம் மற்றும் மனித உயிர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும் என்ற அடிப்படையில் இத்தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment