J.f.காமிலா பேகம்-
கொரோனா வைரஸினால் கொழும்பில் உயிரிழந்த முஸ்லிம் நபரது உடலை தகனம் செய்யாமல் நீதியமைச்சர் அலிசப்ரி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தானனே குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பை அண்மித்த இரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 15ஆம் திகதி கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் , அவர் நீதியமைச்சரின் உறவினர் என்பதால் நீதியமைச்சரது அழுத்தத்திற்கு மத்தியில் உடல் தகனம் செய்யப்படாமல், அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் மேற்கண்ட தகவல்களை அம்பலப்படுத்தினார்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சுப் பதவியில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் சவால் விடுத்தார்.
ReplyForward
0 comments :
Post a Comment