இராஜினாமா செய்வேன்-நீதியமைச்சர் அலிசப்ரி அதிரடி அறிவிப்பு


J.f.காமிலா பேகம்-

கொரோனா வைரஸினால் கொழும்பில் உயிரிழந்த முஸ்லிம் நபரது உடலை தகனம் செய்யாமல் நீதியமைச்சர் அலிசப்ரி, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தானனே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பை அண்மித்த இரத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் கடந்த 15ஆம் திகதி கொரோனா தொற்றினால் உயிரிழந்த நிலையில் , அவர் நீதியமைச்சரின் உறவினர் என்பதால் நீதியமைச்சரது அழுத்தத்திற்கு மத்தியில் உடல் தகனம் செய்யப்படாமல், அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் மேற்கண்ட தகவல்களை அம்பலப்படுத்தினார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அமைச்சுப் பதவியில் இருந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்வதாகவும் அமைச்சர் சவால் விடுத்தார்.






ReplyForward

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :