இலங்கையில் இன்னும் இரண்டே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டபோது இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும் இன்னும் இரு வாரங்களிற்குள் கொரோனா தொற்றாளர்களின் பரவும் வீதமும் குறைவடைந்துவிடும் என அவர் தெரிவித்தார்.
ஆகவே பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கு மிகவும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
0 comments :
Post a Comment