நானு ஓயாவில் 40 குடும்பங்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டனர்..

தலவாக்கலை பி.கேதீஸ்-

நுவரெலியா பிரதேசசபைக்குட்பட்ட நானுஓயா ரதெல்ல வங்கி ஓயா கீழ் பிரிவு தோட்டத்தில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பிரதேச சுகாதார அதிகாரி தெரிவித்தார்.

நானுஓயா ரதெல்ல வங்கிஓயா கீழ் பிரிவைச் சேர்ந்த 19 வயது ஆண் ஒருவருக்கு கொழும்பில் கொரோனா தொற்று இருப்பது 25.11.2020 உறுதியானதையடுத்து வங்கி ஓயா கீழ் பிரிவில் இரண்டு லயன் குடியிருப்புகளில் வசித்த 40 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு 26.11.2020 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞன் கொழும்பிலிருந்து தீபாவளி பண்டிக்கைக்கு வங்கி ஓயாவிலுள்ள தனது வீட்டிற்கு வந்து சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார் பின்னர் மூன்று நாட்களுக்கு முன் கொழும்பு சென்ற நிலையில் அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.மேலும் இவருடன் நெருங்கி பழகியவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் நானுஓயா பிரதேச சுகாதார அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :