1800 கோடி பெறுமதியான 100 Kg போதைப்பொருளுடன் 6 இலங்கை வாலிபர்கள் இந்தியாவில் கைது!


சிரேஷ்ட ஊடகவியலாளர், எம்.எம்.நிலாம்டீன்-
மிழ் நாடு தூத்துக்குடி கடல் எல்லையில் 10 KM கடல் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் படகு ஒன்று நின்றிருந்தது!
கடலோர காவல் துறையினர் படகை முற்றுகையிட்டு சோதனை நடத்திய போது 6 இலங்கை வாலிபர்கள் இருந்துள்ளார்கள்.

100 Kg போதைப்பொருள் மற்றும் 20 பெட்டிகளில் கிரிஸ்டல் மெக்டம் சிட்டைன்மென்ட் போதைப்பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது!
இவர்களிடம் விசாரனை நடத்திய கடலோர காவல் துறையினர் தகவல் தருகையில்: 
இவர்கள் படகு ஒன்றை வாடகைக்கு அமர்த்தி பாகிஸ்தான் கடல்
பகுதியில் போதை பொருட்களை வாங்கிக்கொண்டு ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்த போது படகு டீசல் தீர்ந்து போயுள்ளது. 

அதனால் காற்று இவர்களின் படகை சர்வதேச எல்லையில் இருந்து தூத்துக்குடி கடல் எல்லைக்குள் அடித்து வந்துள்ளது !
இவர்களிடம் 6 துப்பாக்கிளும் இருந்துள்ளது !துப்பாகிகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது .
இந்த 6 வாலிபர்களும் இன்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் !

குறிப்பு :
-----------
எனது பார்வையில் இந்த 6 வாலிபர்களும் 20-24 வயது வாலிபர்கள் இவர்களுக்கும் இந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இருக்காது.
ஆனால் இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட கூலிப்படை என்பது மட்டும் நன்றாக புரிகிறது.

இவர்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது !கடத்தல் பயிற்சி மற்றும் ஆயுதப் பயிற்சியும் சேர்ந்து!
மற்றும் ஆஸ்திரேலியா கொண்டு போக என்பது சுத்தப் பொய் .காரணம் இந்த மாதங்களில் கடல் கொந்தளிப்பு என்பது எல்லோருக்கும் தெரியும் அதனால் படகில் நீண்ட தூரம் கடல் பயணம் செய்ய முடியாது.
அதனால் இந்த போதைப் பொருட்கள் இலங்கை நோக்கி கொண்டு வர ஏற்பாடு இருந்துள்ளது!
எப்படியோ மிகப்பெரிய பின்னணி உள்ளது சர்வதேச
மாபியாக்களின் கடத்தல் ஒன்று தமிழக கடலோரக் காவல் துறை பிடித்துள்ளது!

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :