ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளான மு.காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ் மற்றும் த.மு.போ.கூட்டணி ஆகிய கட்சிகளின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள், 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆதரவாக வாக்களித்த குறித்த உறுப்பினர்களுக்கு எதிராக அவர்களது தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தலைவர்களையும் எதிர்க் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க் கட்சிக்குள் வலுப்பெற்று வருகின்றது.
கடந்த 23ம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் நடை பெற்ற கூட்டத்திற்கு, ரவூப் ஹக்கீம், ரிஷாட் மற்றும் அவரது கட்சியின் உறுப்பினர் முஷாரப் ஆகியோர்கள் மாத்திரம் அழைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த கூட்டத்தில், இரட்டைப் பிரஜாவுரிமைக்கு ஆதரவு தெரிவித்தது தொடர்பில் எழுந்த வாக்கு வாதத்தின் போது முஷாரப் எம்.பி வெளி நடப்புச் செய்திருந்தார்.
0 comments :
Post a Comment