நாடளாவிய ரீதியில் ஊரடங்கு குறித்து வெளியான புதுதகவல்

J.f.காமிலா பேகம்-

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமானது வார இறுதிநாட்களில் மேலும் கடுமையாக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக 44 பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு வார இறுதியில் பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக வளைத்தளங்களில் வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொரோனா தடுப்பு செயலணியின் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஊரடங்கு உத்தரவு குறித்த எந்தவித திர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :