அக்டோபர் 07, 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய காரியாலயங்களுக்கு பொதுமக்கள் வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிமுறையும் அறிவிக்கப்ப்டுள்ளது.
இதன்படி, குறித்த நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 வரையான காலப்பகுதியில் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் ஊடாக தொடர்புகொண்டு சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இது தொடர்பான விவரம் கீழே தரப்பட்டுள்ளது
கடவுச்சீட்டுப் பிரிவு - 0707101060 / 0707101070,
குடியுரிமைப் பிரிவு - 0707101030,
வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு - 0115329233 / 0115329235,
வீசா பிரிவு - 0707101050 / dcvisa@immigration.gov.lk / acvisa1@immigration.gov.lk / acvisa2@immigration.gov.lk / acvisa@immigration.gov.lk
துறைமுகப் பிரிவு - 0777782505
0 comments :
Post a Comment