அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபை சுகாதாரப் பிரிவுக்கு ஒரு தொகுதி கையுறைகளை (Glouse) மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் அன்பளிப்பு செய்துள்ளார்.
இவற்றை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பரிடம் அவர் கையளித்தார்.
மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்கருதி, மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் இராஜன் தாமாக முன்வந்து இவற்றை அன்பளிப்பு செய்தமைக்காக அவருக்கு மாநகர முதல்வர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், ஹென்றி மகேந்திரன், சி.எம்.முபீத், ஏ.சி.சத்தார், அப்துல் மனாப், ஏ.ஆர்.பஷீரா, மாநகர சபையின் கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், பொதுச் சுகாதார பரிசோதகர்களான எஸ்.தஸ்தகீர், எஸ்.இளங்குமரன் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
0 comments :
Post a Comment