மேலும் 609 பேருக்கு கொரோனா-எம்பிலிப்பிட்டியவிலும் பரவல்

J.f.காமிலா பேகம்-

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 609 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 496 பேர் பேலியகொட மீன் சந்தையில் உள்ள கொரோனா நோயாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.

இதேவேளை பேலியகொட மீன் சந்தைத் தொகுதியில் தொழில்புரிந்து வீடு சென்ற இரத்தினபுரி எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவருடன் நெருக்கமாக இருந்த சுமார் 60 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து குறித்த நபர் பொது போக்குவரத்து பயன்படுத்தியுள்ளதுடன், எம்பிலிப்பிட்டிய நகரில் அந்நபர் சென்றுவந்த 42 கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :