இலங்கையில் கொரோனா 2வது அலை பரவிய இரகசிய உண்மை ஜனாதிபதியிடம் புலனாய்வு அறிக்கை!

J.f.காமிலா பேகம்- 

லங்கையில் கோரோனா தாக்கத்தின் இரண்டாவது அலை ஏற்பட்ட விதம் பற்றி புலனாய்வு பிரிவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரகசிய அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர்.

இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை வந்த துருக்கி விமான சேவைகள் நிறுவனத்தின் விமானத்தில் வந்த யுக்ரைன் பணிக்குழு மூலமே தொற்று இலங்கையில் பரவியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணிக்குழு சீதுவ பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளது.

இப்படி வெளிநாட்டு நபர்கள் தங்கினால் அங்குள்ள அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது கோவிட்19 சட்டமாகும்.

இந்த ஹோட்டலில் உள்ள 60 பணியாளர்களின் அறைவாசிப்பேர் பொதுப்போக்குவரத்து மூலம் தினமும் தொழிலுக்கு வருபவர்கள்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியும் அவர்கள் தினமும் வீடுகளுக்கு சென்று வந்ததை கைவிடவில்லை.

அப்படி சென்று வருபவர்களில் ஒருவர் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியருடன் தொடர்பில் இருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் விரைவில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் முகாமை மீது சட்டம் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :