M.I.இர்ஷாத்-
கொழும்பில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட வைரஸ் நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் 211 பேர் இருந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு நகரிற்குள் 159 பேரும், மட்டக்குளியில் 32 பேரும், மோதரையில் 03 பேரும், பொறளையில் 07 பேரும், கிராண்ட்பாஸ் 02 பேரும், கிருளப்பனையில் 03 பேரும் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர கம்பஹாவில் 03 பேரும், தொம்ப்பே பகுதியில் 04 பேரும், மஹர பகுதியில் 55 பேரும், மினுவங்கொடையில் 05 பேரும், பியகமவில் ஒருவரும், அத்தனகல்ல பிரதேசத்தில் 06 பேரும், ஜா-எல பகுதியில் 07 பேரும், நாரஹேன்பிட்டியில் இருவரும், வெள்ளவத்தையில் ஒருவரும், தெமட்டகொட,நாவல பகுதிகளில் தலா ஒருவர் வீதமுமாக இவர்கள் பதிவாகியிருக்கின்றனர்.
0 comments :
Post a Comment