கல்முனை ஜெமீல் வைத்தியசாலையில் 10,000 வது குழந்தை -கேக் வெட்டி கொண்டாடிய வைத்தியர்கள்.

எம்.எம். ஜெஸ்மின், நூருள் ஹுதா உமர்-


டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் 35 வருட சேவையின் 10,000வது குழந்தை நேற்று (22) வெற்றிகரமாக பிரசவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒட்டி நடைபெற்ற வைபவத்தில் அதிதிகளாக மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணர்களான டாக்டர்.றஸீன் மொகமட் மற்றும் டாக்டர். ராஜீவ் விதானகே உட்பட மேலும் பல விசேட வைத்திய நிபுணர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டாக்டர் . ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எம். எஸ். எம். நஜீம்டீன் கருத்து தெரிவிக்கையில், காலம் சென்ற மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய கலாநிதி எ.எல்.எம். ஜெமீல் அவர்களின் சேவை காலம் முதல் இன்று வரையான காலப் பகுதியில் கடமை ஆற்றிய சகல துறை சார் வைத்திய நிபுணர்களுக்கும் மேலும் இந்த நிகழ்வில் பங்குகொண்ட ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் தனது வைத்தியசாலை சார்பாகவும் அதன் தலைவர் டாக்டர் றிஸான் ஜெமீல் சார்பாகாவும் நன்றிகளை தெரிவித்தார்.

டாக்டர் . ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் Cystocopy, Laproscopy, CT Scan, போன்ற மேலும் பல விசேட நவீன வைத்திய வசதிகளை விரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்போவதாகவும் அதன் நிதி மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நஜீம்டீன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :