வாக்களிப்பில் தமது ஜனநாயக உரிமையை வழமைப்போன்று பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் வாக்காளர்களுக்கு அழைப்பு!


கொரோனா வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற கொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 
வாக்களிப்பு இன்று காலை 7.00மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பில் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பொலிசாரiயும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாகவே வீடியயோ செய்வதற்கும் பொலிசார் தீர்மானித்துள்ளனர்.
அதற்கிணங்க சகல பெலிஸ் பிரிவுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :