தர்ம சங்கடத்தில் மஹிந்த; அமைச்சுகளை கேட்டு 100 பேர் தொந்தரவு!

ஜே.எப்.காமிலா பேகம்-


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பலரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அமைச்சுப் பொறுப்புக்களை கோரிவருவதால் பாரிய சங்கடத்திற்கு பிரதமர் தள்ளிவிடப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாகவும், அவரது குடும்ப உறுப்பினர்களை அணுகியும் இவ்வாறு கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

அமைச்சுப் பதவிகளை கேட்டு தன்னிடம் வர வேண்டாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

இதனாலேயே பிரதமரை குறித்த உறுப்பினர்கள் நாடியுள்ளனர்.

எவ்வாறாயினும் நாளை மறுநாள் புதன்கிழமை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :