பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குமார் துரைராஜசிங்கம்


தலவாக்கலை பி.கேதீஸ்-

த்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் புதிய பீடாதிபதியாக குமார் துரைராஜசிங்கம் இன்று (10.6.2020) கடமைப் பொறுப்பேற்றார். இந்தக் கலாசாலையில் இதுவரை பீடாதிபதியாக இருந்த ரமணி அபேநாயக்க வயம்ப தேசிய கல்வியியல் கல்லூரிக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து, புதிய பீடாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியின் 9 வது பீடாதிபதி இவராவார். பத்தனை ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் இன்று நடைபெற்ற பதியேற்பு, பதவி கையளிப்பு நிகழ்வில், கலாசாலையின் புதிய பீடாதிபதி குமார் துரைராஜசிங்கம், முன்னாள் பீடாதிபதி ரமணி அபேநாயக்க உட்பட கலாசாலை அலுவலர்களும் கலந்துகொண்டனர். புதிய பீடாதிபதி, இதற்கு முன்னர் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் கல்லூரியின் உப பீடாதிபதியாகவும் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -