மொரட்டுவை பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு கலாநிதி வி.ஜனகன் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்...!

வி.ஜ.ஊடகப் பிரிவு-

கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும், ஜனனம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும், ஐ.டி.எம் நிறுவனத்தின் தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளருமான கலாநிதி வி.ஜனகன் அவர்களின் ஏற்பாட்டில் மொரட்டுவை கொரலவெல்ல பகுதியில் வசிக்கும் பல்வேறு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அங்குள்ள பல மாணவர்களின் கல்விக் கனவை பூர்த்தி செய்யும் வகையில் புலமைப் பரிசில்கள் பெற்றோர்களிடம் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த புலமைப்பரிசில் திட்டம் அண்மையில் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் அவர்களின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டதுடன், நாடளாவிய ரீதியாக ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கும் வகையில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -