மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதைவிடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும்.


" மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதைவிடுத்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு கொள்கை ரீதியிலான திட்டங்களை ஜனாதிபதி வகுக்கவேண்டும். இவ்வாறான விடயங்களை சுட்டிக்காட்டி, ஆலோசனைகளை முன்வைப்பதற்காகவே பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தினோம்." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நாட்டில் நிதி அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவ்வமைச்சுக்கு செயலாளர் ஒருவர் இருக்கின்றார். வங்கிகளின் வங்கியாகக் கருதப்படுகின்ற மத்திய வங்கிக்கு ஆளுநர் ஒருவரும் இருக்கின்றார். இவர்கள் மூவருமே பிரதானமாக பொறுப்புக்கூறவேண்டியவர்கள். இவர்களுக்கான நியமனத்தை ஜனாதிபதியே வழங்கினார்.எனவே, இவர்களைவிடுத்து மத்திய வங்கி அதிகாரிகளை அழைத்து , பிரசாரத்துக்காக அவர்களை மிரட்டுவது ஜனாதிபதியொருவர் செய்யக்கூடி பணி அல்ல.

அமைச்சரவையில் இவ்வாறு பொங்கியெழுந்து நிதி அமைச்சரிடம் ஜனாதிபதி தனது வினத்தை வெளியிட்டிருந்தால் அதனை வரவேற்றிருக்கலாம். ஆனால், அரசாங்க அதிகாரிகளை இவ்வாறு மிரட்டுவது தவறான முன்னுதாரணத்தை வழங்கும் செயலாகும். ஜனாதிபதியாக இருந்தாலும் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்படவேண்டும்.
நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதியின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அரச அதிகாரிகள் தவறான முடிவுகளை எடுத்தால் , பாராளுமன்றமும் இல்லாத நிலையில் பொறுப்புக்கூறவேண்டியது யார்?
எனவே, மிரட்டல்கள், எச்சரிக்கைகள் அல்ல, கொள்கை ரீதியிலான திட்டங்களே அவசியம். எட்டு மாதங்கள் ஆகியும் ஜனாதிபதி இதனை உரிய வகையில் செய்ததாக தெரியவில்லை. இராணுவ அதிகாரிகளை நியமித்து செயலணிகளை அமைத்தால் மட்டும் பிரச்சினைகளை தீர்ந்துவிடாது." - எனவும் வேலுகுமார் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -