எதிர் வரும் பொதுத்தேர்தலை சவாலுக்கு உட்படுத்தி, மற்றுமொரு மனுவொன்று உச்சநீதிமன்றில் இன்று(9) சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் புதிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான முன்னாள் எம்.பி குமார வெல்கம ஆகியோர் இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானி அறிவித்தல் ஆகியவற்றை இரத்துசெய்யும்படியே அவர்கள் மனுத்தாக்கலை செய்துள்ளனர்.