கசிப்பினால் ஏற்பட்ட விபரீதம்: கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பஸ்த்தர் பலி
பின்னவலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மாரந்தென்ன பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய நபர் ஒருவர் பலியானதுடன் மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரையும் கைது செய்துள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்
பின்னவலை பம்புகொலை கீழ்பிரிவை சேர்ந்த 43 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான வேலுகுமார் ராஜ் என்பவரே இவ்வாறு பலியானார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவகையில் 06/05 இரவு பம்புகொலை கீழ்பிரிவு தோட்டத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியே கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோதலில் ஈடுபட்ட இருவரும் கசிப்பு அருந்தியுள்ளதாக பின்னவலை பொலிஸார் தெரிவித்தனர்
கத்தி குத்துக்கு இலக்காகிய நபர் பலத்த காயங்களோடு மாரந்தென்ன வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதே இடைநடுவில் உயிர்ழந்துளார்.
உயிரிழந்தவரின் சடலத்தை பலாங்கொடை நீதவான் நீதிமன்றின்
பதில் நீதவான் டி.எம்.சந்ரசேகர பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மரத்தென்ன
வைத்தியசாலையில் இருந்து பலாங்கொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பதில் நீதவான் உத்திரவு பிறப்பித்துள்ளார்
இதேவேளை கத்தி குத்து சம்பவத்துடன் தொடர்புடையவர் என
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பலாங்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலை படுத்த பின்னவலை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளையும் ஆரம்பித்துள்ளனர்.