ஐ.தே.க தலைமை பதவிகளில் மாற்றம்:கட்சிக்குள் மீண்டும் "கசமுசா"!

ஜே.எப்.காமிலாபேகம்-
க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சாகல ரத்நாயக்க நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
பொதுச் செயலாளர் பதவியில் உள்ள முன்னாள் அமைச்சர், அக்கிலவிராஜ் காரியவசம், ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்படுவார், என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேவேளை தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின், உப தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க அப்பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், இந்தத் தீரமானத்திற்கு கட்சியிலுள்ள சிரேஸ்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர், என சிறிகொத்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -