திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, தாக்கிய நபர் ஒருவர் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சமூர்த்தி உத்தியோகத்தர் ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, தாக்கிய நபர் ஒருவரை நேற்று புதன்கிழமை(20) மாலை கைது செய்துள்ளதாக வான்எல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேப்பந்தவனை,மணிராசம்குளம் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே பொலிஸாரினால் கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் மணிராசம் குளம் பகுதியில் அரசினால் வழங்கப்பட்டு வருகின்ற ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு தொடர்பாக அப்பகுதி சமூர்த்தி உத்தியோகத்தருடன் சண்டையில் ஈடுபட்டு தாக்கியதோடு,அவரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சமூர்த்தி உத்தியோகத்தரினால் வான்எல பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு,கந்தளாய் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -