கதீப் - முஅத்தின்மார்களுக்கான உலர் உணவு பொதி வழங்கி வைப்பு


 யூ.கே.காலித்தீன்-
ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பினால் வருடா வருடம் அமைப்பின் சர்வதேச உள்ளுர் நல்லுள்ளங்களின் பங்களிப்புடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் கொவிட்19 தாக்கத்தின் காரணமாக சர்வதேசமும், எமது நாடும் முடங்கிக்கிடக்கின்ற இக்கால கட்டத்தில் வருமானம் எதுவுமின்றி நிர்க்கதியாகியுள்ள சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்களில் கடமையாற்றும் முஅத்தின் மற்றும் இமாம்களுக்கு (21) ஆம் திகதியன்று பெருமதி வாய்ந்த ஒரு தொகை உலர் உணவு வழங்கி வைக்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய சமூக இடைவெளியை பின்பற்றி மிக குறுகிய நேர இடைவெளியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் யூ.கே. காலித்தீனின் தலைமையிலும், அமைப்பின் சிரேஷ்ட தலைவைர்களில் ஒருவரான அல் ஹாபில் மௌலவி நப்றாஸ் ஹனிபாவின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.

நிகழ்வில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு கதிப் முஅத்தின் சம்மேளத்தின் தலைவர் எம்.ஐ.எம். ஆதம்பாவா, ஸீறா பவுன்டேசன் ஸ்ரீ லங்கா அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோருடன் கதீப். முஅத்தின் சம்மேளனத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -