வெசாக் மற்றும் சித்திராப்பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு இன்று பௌத்த விகாரைகள் இந்து ஆலயங்கள் மலையக நகரங்கள் ஆகியவற்றில் சனநடமாட்டம் இல்லாதபோதிலும் வெசாக் அலங்காரக்கூடுகளால் நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கம் எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.மக்கள் நடமாட்டத்தினை குறைத்து சமூக இடைவெளியினை பேணுவதற்காகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனினும் இன்று வெசாக் பௌர்ணமி தினம் என்பதால் மலையகத்தில் காணப்படும் அட்டன் கொட்டகலை ராகலை நோர்வூட், மஸ்கெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பௌத்த கொடிகளாலும் வெசாக் அலங்காரக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்ததன் காரணமாக அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுவதை காணக்கூடியதாக இருந்தன.