கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறைந்துள்ள நிலையில், பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பிலான தேர்தல் ஒத்திகை ஒன்று அடுத்தவாரம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் மற்றும் அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சுகாதார ஏற்பாடுகள், சமூக இடைவெளி போன்ற விடயங்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இந்த தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக அரச தகவல்கள் கூறுகின்றன.
இந்த தேர்தல் ஒத்திகையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள், தேர்தல் கடமையில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள், பாதுகாப்புப் பிரிவு உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.