திருகோணமலையில் வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு.


எப்.முபாரக்-
சேர்விங் ஹியுமானிட்டி அமைப்பின் கொவிட் 19 நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலை சர்வமத பேரவையின்(எல் ஐ ஆர் சி) இன் ஏற்பாட்டில் திருகோணமலை விபுலானந்தா பாடசாலை மைதானத்தில் திங்கட்கிழமை (18) வறுமை கோட்டின் கீழ் வாழும் நூறு குடும்பங்களுக்கான நிவாரண உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன
இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், எஸ் எச் எப் நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எம்.அன்சாரி திருகோணமலை பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸ் பரிசோதகர் ஜெஸ்மின் ராணி ,மத தலைவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி நிவாரண உதவி இரண்டாம் முறையாக சேர்விங் ஹியுமானிட்டி நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -