திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மினி சூராவளி காற்றினால் அறுபது வீடுகள் சேதமடைந்துள்ளதாக கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க இன்று(19) தெரிவித்தார்.
கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்போபுர,வட்டுக்கச்சி,மற்றும் ரஜவெவ போன்ற பகுதிகளில் திங்கள் கிழமை(18),மற்றும் செவ்வாய்கிழமை (19) அதிகாலை வேளைகளில் வீசிய கடும் சூறாவளி காற்றினால் அறுபது வீடுகள் கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளதாகவும் கந்தளாய் பிரதேச செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இவை தொடர்பான சேதவிபரங்களை கணக்கெடுக்க அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் வருகை தந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டுள்ளதாகவும்,இக் காற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தவிசாளர் மேலும் தெரிவித்தார்.