நுவரெலியா வரைக்கப்பட்ட கல்வி சார் ஊழியர்களின் சிக்கன கடன் உதவி கூட்டுறவு சங்கத்தில் ((EDCS) அறவிடப்பட்ட பணத்தினை மீளப்பெறுவதில் ஆசிரியர்கள் தற்போது நுவரெலியாவில் உள்ள காரியாலயத்திற்கு வருகை தந்தவர்கள் அறவிடப்பட்ட பணத்தினை மீளப்பெற முடியாது. போனமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது
அரசாங்கம் தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக ஆசிரியர்கள் பெற்ற கடன் அறிவிடுவதனை ஆறுமாத காலத்திற்கு பிற்போடு மாறு அறிவித்திருந்தது. எனினும் இதனை கருத்தில் கொள்ளாத குறித்த கல்விசார் ஊழியர்களின் சிக்கன கடனுதவி சங்கம் ஆசிரியர்களிடமிருந்து ஏப்ரேல் மாதம் கடனை அறிவிட்டது. அதனை தொடர்ந்து தொழிற்சங்கங்கள் கல்விசார் ஊழியர்கள் இது குறித்து அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில் இதனை மீள செலுத்துவதற்கு அச்சங்கம் அறிவித்து அதனை சமூக வலைதளங்கள் ஊடாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அறவிட்ட பணத்தினை மீளப்பெறவே ஆசிரியர்கள் நேற்று (24) திகதி நுவரெலியா கல்விசார் ஊழியர்களின் சிக்ன கடனுதவி கூட்டுறவு சங்க காரியாலத்திற்கு வருகை தந்தனர். குறித்த கிளை காரியாலயத்தில் இருந்த உத்தியோகஸ்த்தர்கள் ஒரு சிலருக்கு மாத்திரம் காசோலை தருவதாக தெரிவித்தன் காரணமாக அங்கு அமைதியற்ற சூழல் உருவானது.
இதனால் காலையிலிருந்து காசோலைகளை பெற வந்த ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்
சிலர் வெறுங் கையோடு வீட்டுக்கு சென்றதுடன் சிலர் காத்திருந்து காசோலைகளை பெற்றுச்சென்றனர்.
ஆசிரியர்களின் பணத்தில் இயங்கும் குறித்த நிறுவனம் ஆசிரிகளை வீணாக அலையவிடுவதாகவும்,குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் உத்தியோகஸ்த்தர்கள் ஆசிரியர்களை மதிக்காது நடந்து கொள்வதாகவும்.இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிதியினை பெறுவதற்காக சில கர்பினி ஆசிரியைகளும் வருகை தநதிருந்தனர.; காலையிலிருந்து அவர்களை வெளியில் அமர செய்து விட்டு பின்நேரம் இந்த நிதி வழங்க முடியாது பிரிதொரு நாளில் வங்கிக்கணக்கில் வைப்பிலிடுவதாக தெரிவித்தன் காரணமாக பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
பல்வேறு வேலை பலுக்களை விட்டுவிட்டு இதனை பெறுவதற்கு வந்ததாகவும் இங்கு பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள் மீது எவ்வித கரிசனையுமின்றி செயப்படுவதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முறையான நெறிமுறைகளை கையாளாது தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் காசோலைகளை பெற்றுக்கொடுப்பதாகவும் வீணாக காலம் தாழ்த்துவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
பணம் மீளப்பெறுவதற்கு காலையிலேயே கொடுத்தாலும் கூட அதனை சேர்த்து வைத்திருந்து பின்னேரம் தான் வழங்கப்படுவதாகவும் இதனால் ஆசிரியர்கள் கல்விசார் ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு;ள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்த பணிப்பாளர் சபை உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஆசிரியர்கள்; தெரிவிக்கின்றனர்.