சம்பூர் சந்தனவெட்டை பகுதியிலே மகனின் தாக்குதலில் தாயொருவர் உயிரிழப்பு.


எப்.முபாரக்-
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தனவெட்டை பகுதி, சந்தனவெட்டை வீதியில் மகனின் தாக்குதலில் தாயொருவர் நேற்றிரவு (04) உயிரிழந்துள்ளாரென சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் சம்பூர், சீதனவெளி பகுதியைச் சேர்ந்த இராசையா சரோஜாதேவி (57 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது:

குறித்த பெண்ணும் அவரது மகன், மருமகள் ஆகியோர் சீதனவெளி பகுதியில் வசித்து வந்த நிலையில், மகனுக்கும் மருமகளுக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மருமகள், சந்தனவெட்டை, 64ஆம் கட்டையிலுள்ள அவரது தாயாரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் மீண்டும் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து தாயார் இது தொடர்பாக விசாரிப்பதற்காக வீதியால் சென்று கொண்டிருந்த போது அவரது மகன் எதிரில் வருகைதந்ததாகவும் தகராறு தொடர்பில் கேட்டபோது தாயாரை மகன் அங்கேயே அடித்துக் கொன்றுள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்த சம்பூர் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மகனைக் கைதுசெய்துள்ளனர்.
உயிரிழந்திருந்த தாய்க்கு அருகில் தாக்குதல் நடத்திய மகன் உறங்கிக் கொண்டிருந்ததாக, அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -