திருகோணமலையில் முப்பதாயிரம் சட்டவிரோமாக தயாரிக்கப்பட்ட பீடிகளை கொண்டு சென்ற இருவர் கைது.

எப்.முபாரக்-

தி
ருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத முப்பதாயிரம் பீடிகளுடன் இருவரை இன்று(6) கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூதூர் பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய வாகனத்தின் சாரதியும்,உதவியாளரையும் கைது செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளையிலிருந்து மூதூருக்கு டிமோ ரக பட்டா ஒன்றில் முப்பதாயிரம் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட பீடிகளை அனுமமிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே அக்போபுர பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தில் இன்றூ காலை 6.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலே இவ்வாறு பீடிகளுடன் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -